Friday 17th of May 2024 04:01:08 AM GMT

LANGUAGE - TAMIL
டெங்கு காய்ச்சலினால் மன்னாரில் கடமையாற்றிய இரு பொலிஸ் அதிகாரிகள் மரணம்!

டெங்கு காய்ச்சலினால் மன்னாரில் கடமையாற்றிய இரு பொலிஸ் அதிகாரிகள் மரணம்!


மன்னார் பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றிய இரு பொலிஸ் உத்தியோகஸ்தர்கள் டெங்கு நோயினால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளனர்.

மன்னார் பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றிய மதவாச்சி ஹெத்தாகட ஹெட்ட வீரகொல்லாவ பிரதேசத்தைச் சேந்த மூன்று பிள்ளைகளுக்கு தந்தையான பி.சீ.பியரத்தின (வய- 45) என்பவர் கடந்த ஞாயிற்றுக்கிழமை மன்னார் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலன் இன்றி உயிரிழந்தார். இதேவேளை மன்னார் பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றி விடுமுறையில் சென்ற அனுராதபுரம் தளாவ பகுதியை சேர்ந்த எஸ்.ரத்னாயக்க (வயது-28) என்ற பொலிஸ் அதிகாரி நேற்று திங்கட்கிழமை (13) அனுராதபுரம் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்துள்ளார்.

இதே வேளை மன்னார் மாவட்டத்தில் கடமையாற்றுகின்ற மேலும் 4 பொலிஸ் அதிகாரிகள் காய்ச்சல் காரணமாக மன்னார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை வழங்கப்பட்டு வருகின்றது.

இவர்களும் டெங்கு நோய்க்கு உள்ளாகியுள்ளனரா? என பரிசோதனைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.


Category: செய்திகள், பகுப்பு
Tags:



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE